search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wanted criminal"

    • வேலை வாங்கி தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த தம்பதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை ஞானஒளிவுபுரம் விஸ்வாசபுரி 1-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 50). இவரது மனைவி வத்சலா (42).

    இவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.29 லட்சத்து 88 ஆயிரத்து 325-ஐ வாங்கி மோசடி செய்துவிட்டனர். இது குறித்து மகமாயி என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. பொருளாதார குற்றப்பிரிவு-2க்கு மாற்றப்பட்டது. அவர்கள் தம்பதியை தேடி வந்த போது அவர்கள் இதுநாள் வரை வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கோர்ட்டு தேடப்படும் குற்றவாளியாக தம்பதியை அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×