search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walajapet murder"

    வாலாஜாவில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வாலாஜா:

    வாலாஜா குடிமல்லூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 56). குடிமல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரான இவர், தண்ணீர் கேன் கம்பெனியும் வைத்துள்ளார். இவருக்கும், குடிமல்லூர் வேளாளர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (43) மற்றும் இவருடைய கூட்டாளியான குடிமல்லூர் குட்டி முதலி தெருவை சேர்ந்த சதீஷ் (28) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.

    கடந்த மாதம் காரில் வந்த மீனாட்சி சுந்தரத்தை 2 பேரும் வழிமறித்து தாக்கினர். இதுதொடர்பாக, வாலாஜா போலீசில் அவர் புகார் அளித்தார். தாக்குதல் நடத்திய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இந்த நிலையில், நேற்றிரவு பைக்கில் வாட்டர் கம்பெனியில் இருந்து அணைக்கட்டு ரோடு வழியாக மீனாட்சி சுந்தரம் பழக்கடைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அங்கு வந்த கார்த்திகேயனும், சதீசும் உருட்டுக்கட்டையால் மீனாட்சி சுந்தரத்தை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர்.

    இதில் இடது கையில் பலத்த காயத்துடன் மீனாட்சி சுந்தரம் தப்பி ஓடி உயிர் பிழைத்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வாலாஜா போலீசார் விரைந்து சென்று கார்த்திகேயன் மற்றும் சதீஷை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×