என் மலர்
நீங்கள் தேடியது "VIKRANT"
- கருக்கலைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராமன்.
- நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா அகர்வால். பல வழக்குகளை விசாரித்து வரும் சோனியா அகர்வால், இறந்த ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி ஒரு பெண் வருகிறார். அந்த பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுகிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விக்ராந்திடம் சோனியா அகர்வால் கொடுக்கிறார்.
அந்த பெண் யார் என்பதை தேடி செல்கிறார் விக்ராந்த். இந்த தேடுதலில் அந்த பெண் பொய் சொல்லி சொத்தை அபகரிக்க உருவாக்கப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான பெண் யார் என்பதை தேடி செல்கிறார்.
இறுதியில் சொத்துக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? யார் அந்த பெண்? சொத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் விக்ராந்த், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அந்த பெண் யார் என்பதை தேடி செல்லும் காட்சியிலும், ஆக்ஷன் காட்சியிலும் கவனம் பெற்று இருக்கிறார்.
நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. முழுகதையும் தோளில் தாங்கி பிடித்து இருக்கிறார் அலக்கியா. இவரை சுற்றியே கதை நகர்கிறது. இவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார். மற்றவர்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
கருக்கலைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராமன். திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. சொல்லவந்த விஷயத்தை தெளிவாக சொல்லாதது வருத்தம். ஆரம்பத்தில் வேகம் எடுத்த திரைக்கதை, போக போக வேகம் குறைந்து செல்கிறது. தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
பிரசன்னாவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சௌரப் அகர்வாலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
- விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன.
- ஆகஸ்ட் 22 முதல் இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
கொச்சி:
தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் விக்ராந்த் போர் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம் ஆகியவை இணைந்து முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களை கொண்டு உருவாக்கி உள்ளன.
இந்தக் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை ஆகஸ்ட் 2021-ல் மேற் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகை பயிற்சிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 4-ம் கட்ட கடல் ஒத்திகை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
விக்ராந்த் போர் கப்பல் இந்த மாத இறுதியில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 அன்று இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






