search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vice Chancellor Investigation"

    அரக்கோணம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீதான புகார் குறித்து துணைவேந்தர் முருகன் விசாரணை நடத்தினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    இக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் ‘வாட்ஸ் அப்’ மூலமும், நேரிலும் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த மாணவி அதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.

    மாணவியின் புகார் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த பேராசிரியர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவி திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், ஆட்டுப்பாக்கம் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதுகுறித்து துணைவேந்தர் முருகன் கூறியதாவது:-

    பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழக கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்றார்.

    ×