என் மலர்
நீங்கள் தேடியது "Veshti saree smuggling"
- இரவு காவலர், ஆட்டோ டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலக குடோ னில் வைக்கப்பட்டிருந்த 11 மூட்டை இலவச வேட்டி-சேலை பண்டல் கள் காணாமல் போனதாக, இரவு காவலர் மற்றும் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இலவச வேஷ்டி சேலை
திருவண்ணாமலை திண்டிவனம் ரோட்டில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் குடோன் உள்ளது. இங்கு பொதுமக் களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலைகள் மூட்டை, மூட்டையாக கட்டிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் கிரிவல பாதை அவலுார்பேட்டை ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது மூட்டைகளுடன் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஆட்டோ டிரைவர் மற்றும் உடன் இருந்த நபர் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை ஸ்டே சனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அதில், ஆட்டோவில் இருந்த துணி மூட்டைகள் தாலுகா அலுவலக குடோ னில் இருந்து எடுத்து வந்த இலவச, வேட்டி, சேலைகள் என தெரியவந்தது. இதற் கிடையில், தலைமையி டத்து துணை தாசில்தார் ரமேஷ் கொடுத்துள்ள புகா ரில், தாலுகா அலுவலக குடோனில் இருந்து 11 மூட்டை துணிகள் காணா மல் போயுள்ளதாக குறிப் பிடப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருவண் ணாமலை கிழக்கு போலீ சார் வழக்கு பதிவு செய்து, வடஆண்டாப்பட்டு கிரா மத்தை சேர்ந்த தாலுகா அலுவலக இரவு காவலர் துவாரகேஷ் (28), அதே ஊரைசேர்ந்த ஆட்டோடிரைவர் பரசுராமன் (30) ஆகி யோரை கைது செய்தனர்.






