search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellore tirupattur"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர்-திருப்பத்தூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    அனைத்து பொது வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் வங்கிகளை இணைக்ககூடாது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைவுபடுத்த கோரியும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரியும் வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து பொது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சம்பத்குமார், ரஜனி முன்னிலை வகித்தனர். கோபால், விஜயகுமார், கார்த்திகேயன், ஆனந்தன், சோமசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாரத ஸ்டேட்வங்கி முதன்மை வங்கி மேலாளர் கே.கே.மணி தலைமை வகித்தார் இந்தியன் வங்கி நவீந்திரன் வரவேற்றார். பாரத வங்கி புகழேந்தி இந்தியன் வங்கி கணேஷ் கனரா வங்கி ரமேஷ் விஐயாவங்கி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் விஜயா வங்கி ஞானசவுந்தரி வங்கி மேலாளர்கள் கோதண்டம் சார்லஸ் துனண மேலாளார்கள் சதிஷ் சுஜின் மதிவாணன் சரவணன் ரஞ்சித் உட்பட பலர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கனரா வங்கி வைத்திஸ்வரி நன்றி கூறினார்.

    ×