search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore kottai"

    வேலூர் கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த சுமார் 1 டன் எடை கொண்ட பீரங்கி தோண்டி எடுக்கப்பட்டது. இது 17-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1806-ம் ஆண்டு கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான், இந்தியாவின் முதல் சுதந்திர போர்.

    அந்த காலக்கட்டத்தில் வேலூர் கோட்டை ஆயுத கிடங்காக இருந்தது. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்ட அழகிய கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றது.

    இதன் அழகிய மதில்கள், சுற்றியுள்ள அகழி உறுதியான கல் கட்டமைப்புக்கு புகழ் பெற்றது. இந்த கோட்டையில் திப்பு மகால், ஐதர் மகால், பாஷா மகால், பேகம் மகால், கண்டி மகால் என 5 சிறிய அரண்மனைகள் உள்ளன.

    மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மதத்திற்குரிய ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்துவ தேவாலயம், முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மசூதியும் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள கோசாலை தென்னந்தோப்பில் ஊழியர்கள் குப்பை மற்றும் சாணம் கொட்டுவதற்காக அருகருகே 3 குழிகளை தோண்டினர்.

    பீரங்கியை தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி ஆய்வு செய்த காட்சி.

    அப்போது, பெரிய பீரங்கி மற்றும் 3 பீரங்கி குண்டுகள் தென்பட்டது. உடனடியாக வேலூர் தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு மேலும் குழி தோண்டுவதை நிறுத்தினர்.

    இதையடுத்து, சென்னை மண்டல தொல்லியல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிச் செல்வி இன்று காலை வேலூர் கோட்டைக்கு வந்து மண்ணில் புதைந்திருந்த பீரங்கியை பார்வையிட்டார். சிப்பாய் புரட்சிக்கு பிறகு 17 நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனிகள் பயன்படுத்திய பீரங்கியாக இருக்கலாம் என்று வெற்றிச்செல்வி கூறினார்.

    பிறகு பள்ளத்தில் இருந்த பீரங்கி ஆட்கள் மூலம் மேலே தூக்கப்பட்டது. அந்த பீரங்கி சுமார் 1 டன் எடை இருந்தது. வேலூர் தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பீரங்கியை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். #Tamilnews
    ×