search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various practice exercises"

    • முருகப்பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் ,தேன் ,விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில்‌ உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில்,நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலப்பட்டியில் உள்ள முருகன் மோகனூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவேரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.
    • கால்நடைகளை காப்பாற்றுவது போன்ற ஒத்திகை பயிற்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவேரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகள், ஆறுகளில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது, கால்நடைகளை காப்பாற்றுவது போன்ற ஒத்திகை பயிற்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகை பயிற்சியின்போது கொல்லிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் நல்லதுரை தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் கோவிந்தசாமி, பழனிசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுக்குள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஆடு ,மாடுகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். தண்ணீரில் சிக்கி தத்தளித்துக் கொண்டு இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். அவ்வாறு தண்ணீரில் எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி செல்ல வேண்டும் குறித்த பல்வேறு ஒத்திகை பயிற்சியினை பொதுமக்களுக்கு செய்து காட்டினார்கள். பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சித்ரா, பரமத்தி வேலூர் தாசில்தார் சிவக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் காவல்துறை, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, ஊரக துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்து வத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×