search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various medical tests were done."

    • செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் கிராம அளவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பொது சுகாதார துறையின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, விஜயலட்சுமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த முகாமில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு பரிசோதனை, சிறுநீரில் உப்பு உள்ளிட்ட பரிசோதனைகள், காது, மூக்கு, தொண்டை உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    மேலும் பரிசோதனை யின் முடிவில் ஆலோசனை களும், சிகிச்சைகளும் இலவசம் மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×