search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaniyambadi worker kills"

    வாணியம்பாடி தொழிலாளி பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 48). தொழிலாளி. இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் மர்ம காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜமாலுதீன் ரத்தத்தில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜமாலுதீன் நேற்று இரவு உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு அவர் உயிரிழந்தார் என ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது.

    மற்ற நோயாளிகளுக்கும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆஸ்பத்திரியில் இருந்து இன்று காலை ஜமாலுதீன் உடல் வாணியம்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, வாணியம்பாடி நகராட்சி சுகாதார குழுவினர், சென்னாம்பேட்டையில் மருத்துவ முகாம் அமைத்து சுகாதார பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், சுகாதார பணி மற்றும் துப்புரவு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் தகவல் பரவியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ×