என் மலர்
நீங்கள் தேடியது "VAIKASI VISAKHA FESTIVAL AT VIRALIMALAI TEMPLE"
- விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தினமும் காலை மற்றும் இரவு மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் விராலிமலை முருகன் கோவில் சிறப்பு பெற்ற தலமாகும். இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச் செய்த தலமாக விளங்கி வருகிறது.
இங்கு மலைமேல் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் ஆண்டுதோறும் இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும். இதில் வைகாசி திருவிழாவானது 11 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழாவானது நேற்று காலை சுமார் 11.35 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி (முருகன்) வள்ளி, தெய்வானைக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக தீபாரதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் முருகன் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலாவானது அடுத்த 11 நாட்களுக்கு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழச்சியாக வரும் ஜூன் 12 -ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைகிறது. அதனை தொடர்ந்து 13-ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 14-ம் தேதி விடையாற்றியுடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்ப்பாடுகளை புதுக்கோட்டை தேவஸ்தான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சரியர்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.






