search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaidyanathan"

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு நன்மை செய்யும் வேட்பாளரை தேர்வு செய்வோம் என முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    கமலா அறக்கட்டளையின் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியின் நெசவாளர் நகர், ஆனந்தா நகர், நந்தா நகர், பெத்துசெட்டிப்பேட்டை, வள்ளலார் நகர், மகாவீர் நகர் ஆகிய பகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், பெத்துசெட்டிப்பேட்டை திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கமலா அறக்கட்டளையின் முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். மனோகர் வரவேற்றார். கமலா அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.

    லாஸ்பேட்டை தொகுதியில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து கரடுமுரடாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள். தொகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, மேலும் சாலையில் உள்ள மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியாத மின் விளக்குகளாக உள்ளன.

    தண்ணீர் வரவில்லை என்றால் பெண்கள் உடனடியாக என் வீடு தேடி வந்து சொல்வர். உடனடியாக அதனை சரிசெய்து இருக்கின்றேன். ஆனால் தற்போது அந்த நிலையில்லை. தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. எங்கு இருக்கிறார்? என தெரியவில்லை, மக்கள் படும் துன்பங்களை அவர் உணரவில்லை.

    இதுவே நமது ஆட்சிக் காலமாக இருந்தால் சாலைவசதியாக இருந்தாலும் சரி, மின்சார வசதியாக இருந்தாலும் சரி நாம் அதனை உடனுக்குடன் சரி செய்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நமது தொகுதிக்கு நன்மை செய்யக்கூடிய வேட்பாளரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனார்த்தனன், ஆசிரியர் தயாநிதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சிகளை கோ. செழியன் தொகுத்து வழங்கினார். ராமநாத சுவாமி நன்றி கூறினார். #tamilnews
    ×