search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadamadurai woman"

    வடமதுரை அருகே கடத்தப்பட்டதாக கூறிய பெண்ணை திருமணம் செய்து போலீசில் வாலிபர் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சம்பக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த பழனி மகள் மஞ்சுளா (வயது 21). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது செங்குறிச்சி மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சவுந்தரம் (25) என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மஞ்சுளாவின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுளாவையும், அவரை கடத்திய வாலிபரையும் தேடி வந்தனர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் சவுந்தரம் தனது காதலியை கோவிலில் திருமணம் செய்து கொண்டு இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.

    போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×