search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urfi Javed"

    • வீடியோ 5.4 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் அவரது படைப்பாற்றலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    பிரபல நடிகை ஊர்பி ஜாவேத்தை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் புதிய படங்களை பதிவிடுவார். குறிப்பாக கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து ஆடை தயாரித்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். அவற்றில் சில புகைப்படங்கள் சர்ச்சையாவது வழக்கம். எப்போதும் தான் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு ஆடைகளை வித்தியாசம் காட்டி அணிவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஊர்பி ஒரு ஜோடி ஷூக்களை காட்டுகிறார். பின்னர் அந்த ஷூக்களால் செய்யப்பட்ட உடையை அணிந்து அவர் 'போஸ்' கொடுப்பது போன்று வீடியோ காட்சி உள்ளது.

    இந்த வீடியோ 5.4 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் அவரது படைப்பாற்றலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் அவரை விமர்சித்துள்ளனர்.

    • பிகினி உடை மற்றும் பீட்சாக்களால் இணைக்கப்பட்ட டாப் போன்றவை சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
    • ஒரு வீடியோவில் கைப்பை ஒன்றை பாவாடையாக மாற்றி அணிந்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகை உர்பிஜாவேத் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். இவர் அடிக்கடி வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். அவற்றில் பிகினி உடை மற்றும் பீட்சாக்களால் இணைக்கப்பட்ட டாப் போன்றவை சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கைப்பை ஒன்றை பாவாடையாக மாற்றி அணிந்துள்ளார். இது தொடர்பான வீடியோவில் பிரவுன் நிற கைப்பை ஒன்றை பாவாடை (ஸ்கர்ட்) மற்றும் டாப் போன்று மாற்றி அணிந்துள்ளார். நான் ஒரு கைப்பையில் இருந்து ஆடையை செய்தேன் என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

    மேலும் இணைய பயனர்கள் வீடியோவுக்கு பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

    • உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார்.
    • இவர் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.


    உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன் தந்தையை தன்னை ஆபாச நடிகை என்று அழைத்ததாக உர்பி ஜாவேத் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும் போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர். அதன்பிறகு என்னை ஆபாச நடிகை என்று கூறி என் தந்தை சித்திரவதை செய்தார். அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன். அந்த தருணத்தில் என் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தேன்.


    இதனால், 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்துவிட்டேன். கொஞ்சக் காலம் கால்சென்டரில் பணிபுரிந்தேன். பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அதன் பின் சில சீரியல்களில் நடித்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். இருந்தாலும், தற்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்குக் காரணம் அந்த ஒரு வார பிக் பாஸ் வாய்ப்புதான்" என்று கூறினார்.

    • உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார்.
    • தற்போது தான் அணியும் ஆடைகள் பலரது உணர்வுகளை புண்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.

    உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.


    உர்பி ஜாவேத்

    உர்பி ஜாவேத்

    இதுகுறித்து வலைத்தளத்தில் உர்பி ஜாவேத் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர்.

    இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டுனர். அதேபோன்று மற்றொரு பதிவில், ஏப்ரல் ஃபூல் நான் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறேன் என்று எனக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் உர்பி ஜாவேத்.
    • இவரின் கவர்ச்சியான ஆடையால் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.

    பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவேத் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவேத் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


    உர்பி ஜாவேத்

    மேலும், பொது இடங்களில் படுகவர்ச்சி உடைகளை அணிந்து விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். சமீபத்தில் சன்னி லியோனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து உர்பி ஜாவேத் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த மேலாடை ஒரு சிலந்தி வலைபோல் இருப்பதைப் பார்த்து புகைப்படக்காரர்கள் சிலர் கருத்துகளைப் பறக்க விட்டனர்.


    உர்பி ஜாவேத் - சன்னிலியோன்

    இதைச் சிரித்துக் கொண்டே ரசித்த உர்பி ஜாவித். அங்கேயே அவர்களுக்கு பதில் சொன்னார். இவர் அணியும் உடைகளால் மாணவர்கள் மனது பாதிக்கப்படுவதாகக் கடுமையான கண்டனம் எழுந்து அடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ‘படே பாய்யா கி துல்ஹனியா’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் உர்ஃபி ஜாவேத்.
    • கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார்.

    இந்தி திரையுலகில் பிரபல தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் உர்ஃபி ஜாவேத். இவர் 2016-ஆம் ஆண்டு இந்தி மொழியில் உருவான 'படே பாய்யா கி துல்ஹனியா' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பின் சந்திரா நந்தினி, மேரி துர்கா, ஜிஜி மா, தாயன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

    உர்ஃபி ஜாவேத்

    உர்ஃபி ஜாவேத்

    கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சிறிது நாட்களே இருந்தாலும் அவருக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார். கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள உர்ஃபி ஜாவித், சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு கவர்ச்சி உடை அணிந்து வந்து சலசலப்பை உருவாக்கினார்.

    உர்ஃபி ஜாவேத்

    உர்ஃபி ஜாவேத்

    தற்போது இவர் கவர்ச்சி உடை அணிந்து பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மோசமான கவர்ச்சி உடையில் உர்ஃபி ஜாவித் இருக்கும் புகைப்படத்தை பலரும் கலாய்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×