search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Budget Session"

    • சாதிவாரி கணக்கெடுப்பு, அனைவருக்கும் சம உரிமை தொடர்பான பதாகைகளை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஏந்தியிருந்தனர்.
    • சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுநரே திரும்பி போ என கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.

    இந்த அமளிக்கு மத்தியிலும் உரையாற்றிய ஆளுநர், நல்லாட்சி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையில் மாநில அரசு சென்று கொண்டிருப்பதாகவும், குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையுடன் அமைதி மற்றும் நல்லிணக்க சூழல் உறுதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், மாநில அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டதுடன், சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு குறித்தும் பேசினார். அவரது உரையை ஆளும் பாஜக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

    ஆர்எல்டி, காங்கிரஸ், பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு, அனைவருக்கும் சம உரிமை தொடர்பான பதாகைகளை எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏந்தியிருந்தனர்.

    முன்னதாக விவசாயிகள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது காவலர்களுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாஜ்வாடி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன், பேப்பர் பந்துகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #UPBudgetSession #UPAssembly
    லக்னோ:

    பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். கவர்னர் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள்) அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பத் தொடங்கினர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ‘கவர்னர் கோ பேக்’ என்றும் முழக்கமிட்டனர்.

    ஒருகட்டத்தில், சபையின் மையப்பகுதியை நோக்கி பேப்பர் பந்துகளை வீசி எறிந்தனர். அவற்றை சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.



    இந்த அமளிக்கு இடையிலும் கவர்னர் ராம் நாயக் தனது உரையை தொடர்ந்தார். அவர் தனது உரையில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

    வரும் 7-ம் தேதி நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #UPBudgetSession #UPAssembly
    ×