search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Fisheries Minister"

    • அரசு திட்டங்கள் மீனவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா என மந்திரி ஆய்வு
    • மத்திய அரசு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

    கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் குறித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், 49 மீனவ கிராமங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் மீனவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 


    மத்திய அரசு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய மந்திரியிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கினர். மீன் வளத் திட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து அதிகாரிகள் மீனவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய மந்திரி அப்போது அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×