search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "undiyal Income"

    • நேற்று முன்தினம் 68 ஆயிரத்து 467 பக்தர்கள் சாமி தரிசனம்.
    • 35 ஆயிரத்து 506 பக்தர்கள் தலைமுடி காணிக்கை.

    திருமலை:

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கோவிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆந்திரா, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் அதிக அளவில் உண்டியல் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 68 ஆயிரத்து 467 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 67 லட்சம் கிடைத்துள்ளது. மேலும் 35 ஆயிரத்து 506 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதாகவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×