search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ulamas Pension"

    • காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நல வாரியம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நல வாரியம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது.

    காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஒருங்கி ணைப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு வக்பு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த முகாமில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம், உலமாக்கள் ஓய்வூதியம், இலவச சைக்கிள், இரு சக்கர வாகனத்திற்கான மானியம் மற்றும் தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றிற் கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    முகாமில் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலருமான விக்னேஸ்வரன், தமிழ்நாடு வக்பு வாரிய நெல்லை சரக ஆய்வாளர் நூர் ஆலம் இப்ராஹிம் ஆகியோர் தலை மையில் சம்பந்தப்பட்ட துறை களின் அதிகாரிகள் பலர் பணிகளை செய்தனர்.

    காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பிதுரை, செயலாளர் வாவு சம்சுதீன், துணைச் செயலாளர் நவாஸ் அகமது, துணி உமர், கலீல் ஹாஜி, கைலானி சதக் தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செய லாளர் காயல் மகபூப், த.மு.மு.க. நகரத் தலைவர் ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×