search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia attack"

    • மின்சாரத்தை மக்கள் கவனமாக பயன்படுத்தினால் வரும் நாட்களில் மின் தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்.
    • தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷிய ராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷியாவின் தாக்குதலில் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    மின் உற்பத்தியை சரி செய்ய முயற்சி நடக்கிறது. மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதல் அத்தியாவசியமில்லாத மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    மின்சாரத்தை மக்கள் கவனமாக பயன்படுத்தினால் வரும் நாட்களில் மின் தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்" என்றார்.

    உக்ரைனில் உள்ள முக்கிய மின் நிலையங்கள் ரஷியாவின் தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் அந்நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

    உக்ரைனின் சில பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    • ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.
    • கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தநிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரி ஜியா நகரில் ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தரை மட்டமானதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே கார்கீவ் பிராந்தியததில் ரஷிய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்டு உக்ரைன் ராணுவம் முயன்ற போது ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ரஷியா ராணுவம் கூறும்போது, குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற வந்த உக்ரைன் ராணுவத்தின் அனைத்து தாக்குதல்களும் ரஷிய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. இதில் உக்ரைனின் 220 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 220 வீரர்கள் பலியானதை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.

    2019-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதற்கிடையே ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.

    பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இந்த நிலையில் கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தி உள்ளார்.

    ×