search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalaipettai water problem"

    உடுமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது மெய்வாடி. இங்குள்ள கிராமத்தையொட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு அமராவதி மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 25 நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை உடுமலை- பழனி சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×