search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uchinimaakaali Amman temple"

    • விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
    • நாளை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளகாட்டில் உள்ள உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா இன்று நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நாதஸ்வரம் நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

    9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு கும்ப பூஜையும், யாகசாலை பூஜையும், கோபுரகலசத்திற்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்பம் ஏற்றுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பின்னர் முளைப்பாரி எடுத்து வருதல்,மாவிளக்கு எடுத்து வருதல்,புஷ்பஅலங்கார பூஜை , வாணவேடிக்கை யுடன் சாம பூஜை நடைபெறுகிறது. பின்னர் நாளை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரகுபதி என்ற சின்னராஜ் நாயக்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×