search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tunisia pm"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று அரசை வழி நடத்தி வந்தார்.
    • நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

    துனிசில்:

    வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

    துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். துனிசியாவில் பல்வேறு பேரிடர் தொடர்பான பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். கல்வி சீர்திருத்த பணிகளில் முக்கிய பங்காற்றினார். அவர் துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று அரசை வழி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நஜ்லா பவுடனை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிபர் கைஸ் சையத் திடீரென்று அறிவித்தார்.

    நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

    இதையடுத்து துனிசியாவின் புதிய பிரதமராக அக்மத் ஹச்சானியை அதிபர் நியமித்தார். அக்மத் ஹச்சானி, துனிசியா மத்திய வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

    துனிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் ஆவார். அவர் அதிபர் முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிபர் தனது அதிகார வரம்பை கூடுதலாக நீட்டித்து கொண்டதன் மூலம் அப்போதைய பிரதமரை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தையும் கலைத்து உத்தரவிட்டார். அதன்பின் 2½ மாதங்களுக்கு பிறகு நஜ்லா பவுடனை பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த ஆண்டு திருத்திய அரசியலமைப்பு மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. மேலும் அதிபருக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

    இதற்கிடையே சுமார் 1¾ ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்த நஜ்லா பவுடன் திடீரென்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக வெளி விவகார மந்திரி உள்பட பல மந்திரிகளை காரணம் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்து அதிபர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    துனிசா கடல் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் குடியேறிகள் படகுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய உள்துறை மந்திரியை துனிசியா பிரதமர் அதிரடியாக நீக்கியுள்ளார். #migrantboat #interiorminister
    டுனிஸ்:

    மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

    இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

    லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

    இவ்வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு கடந்த 3-ம் தேதி துனிசியா கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், துனிசா கடல் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் குடியேறிகள் படகுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய உள்துறை மந்திரி லோட்ஃபி பிராஹெம்-ஐ யை துனிசியா பிரதமர் யூசுப் சாஹெட் இன்று மந்திரிசபையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். #migrantboat #interiorminister
    ×