என் மலர்
நீங்கள் தேடியது "tuber"
- ஊட்டி உருளைகிழங்குக்கு தனித்து வமான ருசி உள்ளது.
- உருளை கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்த படியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்ப டுகிறது. குறிப்பாக ஊட்டி உருளை கிழங்குக்கு தனித்து வமான ருசி உள்ளது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான எம்.பாலாடா, இத்தலார், கடநாடு, நஞ்சநாடு, ஆடாசோலை, தேனாடு கம்பை, கொல்லி மலை, ஓரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்ப ட்டுள்ளது. இந்த உருளை கிழங்குக்கு தனித்துவமான ருசி இருப்பதால் நம் மாநிலம் மட்டுமின்றி வெளி மாநி லங்களுக்கு விற்பனை க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டியில் அறுவடை செய்யப்படும் உருளை கிழங்கு மேட்டுப்பாளையம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து பல்வேறு பகுதி களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் சந்தைக்கு சீசன் காலங்களில் நாள்தோறும் 40 டன் அளவுக்கு உருளைகிழங்கு விற்பனைக்கு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக 45 கிலோ எடை கொண்ட உருளை கிழங்கு மூட்டை சராசரியாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனையாகி வருகிறது.
உருளை கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், உருளை கிழங்கு அறுவடை யில் சற்று தொய்வு காணப்பட்டது.
தற்போது மழை குறைந்து விட்டதால், அறுவ டைக்கு தயாரான உருளை கிழங்கை மூட்டை களில் நிரப்பி மேட்டுப்பாளையம் சந்தைக்கு விவசாயி கள் எடுத்து சென்று வரு கின்றனர்.
அங்கு உருளைகி ழங்குக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.
இதேபோல் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளை யத்தில் ஊட்டி பூண்டும் அதிகபட்சமாக கிலோ 4500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இதனால் ஊட்டி நகரா ட்சி மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வரும் பூண்டு, உருளை கிழங்கு அளவு குறைந்துள்ளது.






