search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck collides"

    • ஆட்டோ மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    உசிலம்பட்டி கீழப்புதூர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது52). இவரது மனைவி பத்மா. இவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர். டி.பி. மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பயணிகள் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து பாண்டியின் மனைவி பத்மா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாரி டிரைவர் செக்காணூரணியை சேர்ந்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×