என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tried to set fire"
- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து வந்தனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில், மனுவாங்கும் அரங்கத்தின் நுழைவாயில், பின்புற வாசல் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுலக வளாகத்தில் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருச்சி எட்டறை பகுதியை சேர்ந்த கஜப்பிரியா திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென தான் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை உடலின் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், இதனை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை முறியடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது கணவர் கார்த்திக் திருக்காட்டுபள்ளி காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருவதாகவும், தற்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்த வித நடவடிக்இகையும் எடுக்கப்படவில்லை என்றும் ெதரிவித்தார்.
இதே போல தாயனூர் பகுதியை சேர்ந்த பனையடி என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணைய் கேனுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவாசலிலேயே மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கண்டு பாய்ந்து சென்று, அவரை மடக்கி பிடித்து, தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனக்கு சொந்தமான இடத்தின் பாதையை சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், மீட்டு தர கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்பதாலும், தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எத்தனை பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், இவ்வாறு தற்கொலை முயற்சிகள் வழக்கமாகி வருவது, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்