search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy samayapuram temple"

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 72 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியிடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் இரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 4-ந் தேதி எண்ணப்பட்டது. தற்போது 2-வது முறையாக காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் குமரதுரை, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கரூர் உதவி ஆணையர் சூர்ய நாராயணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. 

    இதில், காணிக்கையாக ரூ.72 லட்சத்து 24 ஆயிரத்து 121 ரொக்கமும், 2 கிலோ 200 கிராம் தங்கமும், 9 கிலோ 150 கிராம் வெள்ளியும் கிடைத்தன. மேலும், வெளிநாட்டு பணம் 289-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து கொண்டிருந்தபோது சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்ற பக்தர் சுமார் 3 அடி உயரம் உள்ள 3 கிலோ 200 கிராம் எடையுள்ள 2 வெள்ளி குத்துவிளக்குகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை கொன்ற யானை மசினிக்கு ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கடந்த மே மாதம் 25-ந்தேதி யானை மசினி, பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சமயபுரம் கோவிலிலிருந்து யானை மசினி வெளியே கொண்டு வரப்பட்டு, மாகாளிகுடியில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சில நாட்களாக யானை மசினி உணவு எதுவும் உட்கொள்ளாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டது. வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க தேனி மருத்துவக்குழுவினர் மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவர் வீரச்செல்வன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், யானை மசினியை பரிசோதனை செய்தனர். அப்போது யானைக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து யானையை ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததை தொடர்ந்து யானை மசினி லாரி மூலம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. யானையுடன் கோவில் இணை ஆணையர் குமரதுரை, மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன் மற்றும் வன பாதுகாவலர்கள் சென்றனர்.
    ×