search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trial postponed"

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணை நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அருண் பரத்வாஜ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பி.குமார் தரப்பில், தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 29-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உள்ளதாக கூறி, அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகல் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா, பி.குமார் ஆகியோர் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்கள் வருகிற பிப்ரவரி 21-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார். #DoubleLeafCase
    விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Vijayakanth
    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டது தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்றும், இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.  #Vijayakanth
    ×