என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training for revenue officers"

    • காணொளி காட்சி மூலம் நடந்தது
    • அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நக்ச லைட்டுகள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் காணொளி காட்சி மூலம் நக்சலைட்டுகள் உருவா காமல் எவ்வாறு தடுக்க வேண்டும் மற்றும் இடதுசாரி நக்சல்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது:-

    இந்தியாவில் தற்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஜார்கண்ட் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளனர் அவர்கள் உருவாகாமல் தடுப்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் தாங்கள் ஈடுபட வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் கூறினார்.

    இதில் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×