search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training certificate"

    • பயிற்சி சான்றிதழ்-பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • பேராசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் காட்டாம்பூரில் உள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் கேட்டரிங், சர்வே, நர்ஸிங், தையல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகள் மத்தியரசின் தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் பயின்ற 30பேர் கொண்ட 9 திறன் பயிற்சி குழுக்களாக 270 பேருக்கு பயிற்சி சான்றி தழும், 10 பேருக்கு பணி நியமன உத்தரவும் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழா விற்கு கல்லூரி தாளாளர் காசிநாதன் தலைமை வகித்தார். பால கிருஷ்ணன், சுரேஷ் பிரபாகர், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி தொழில் துறை கூடுதல் ஆணை யாளர் ஜெயபாலன் மாண வர்களுக்கு பயிற்சி சான்றி தழ் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி மாணவர்கள் தொழில்துறை கல்விகளை முன்னெடுத்து அக்கறையுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் எனும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    ×