என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train platform"
- ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
- ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர்.
ஆந்திர மாநிலம், நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயிலில் ரவிக்குமார் 30) என்ற வாலிபர் பயணம் செய்தார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரவிக்குமார் இறங்க வேண்டும்.
ஆனால் அவர் ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது நிலை தடுமாறிய ரவிக்குமார் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கினார்.
வலியால் அவர் அலறி துடித்தார். இதனைக் கண்ட பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்