என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Train collision death"
வண்டலூர்:
ஊரப்பாக்கம், வெங்கடேஷ்வரா அவன்யூவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தவர் ஏமிகார் மைக்கேல் (வயது26).
இவர் சேலத்தில் கடந்த 26 ஆண்டுக்கு முன்பு தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்பட்டவர். ஆதரவற்றவரான இவர் டிப்ளமோ படிப்பு முடித்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வேலை முடிந்து அறைக்குவந்த ஏமிகார் மைக்கேல் பின்னர் நடைபயிற்சி செல்வதற்காக அப்பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே நடந்து சென்றார்.
அப்போது ஏமிகார் மைக்கேல் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு தன்னுடைய செல்போனில் பாட்டு கேட்டபடி சென்றதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஏமிகார் மைக்கேல் மீது உரசியது.
இந்த வேகத்தில் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த ஏமிகார் மைக்கேல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்