என் மலர்
நீங்கள் தேடியது "traffic cop"
- ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது தாயின் மடியில் இருந்து குழந்தை கீழே தவறி விழுந்தது.
- குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவலரை பலர் பாராட்டி வருகின்றனர்
காசிப்பூர்:
உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், வாகன போக்குவரத்தை, ரோந்து பிரிவு காவலர் சுந்தர் சர்மா, சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது தாயின் மடியில் இருந்து குழந்தை கீழே தவறி விழுந்தது. இதைக் கண்ட போக்குவரத்து காவலர் சுந்தர், விரைந்து சென்று எதிரே வந்த பேருந்தை நிறுத்தினார். பின்னர் அந்த குழந்தையை அவர் மீட்டார். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
#WATCH | Uttarakhand: A CPU (City Patrol Unit) jawan, Sundar Sharma saved the life of a child who fell off the lap of her mother who was sitting on an e-rickshaw, amid busy traffic in Kashipur.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 13, 2022
(Source: CCTV visuals) pic.twitter.com/wpywwtAigr
இது தொடர்பான வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், பலர் அந்த காவலரை பாராட்டி வருகின்றனர்.






