search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trader died"

    • களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பச்சையாறு தடுப்பணையை யொட்டி செல்லும் கால்வாயில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பச்சையாறு தடுப்பணையை யொட்டி செல்லும் கால்வாயில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

    வியாபாரி பலி

    அந்த வழியாக சென்ற விவசாயிகள் இதனை பார்த்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

    இதில் சடலமாக கிடந்தது மஞ்சுவிளையை சேர்ந்த பன்னீர் மகன் தவசிகனி (வயது 55) என்பது தெரியவந்தது. இவர் பன் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இவர் நேற்று முன் தினம் மாலையில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் கால்வாயில் சடலமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×