என் மலர்
நீங்கள் தேடியது "Trader dharna"
- கடன் வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39). இவர் குடியாத்தம் பகுதியில் வெங்காயம், பூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு மனைவி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.50 லட்சமும், தனிநபர் கடனாக ரூ.30 லட்சமும் கடனாக பெற்று உள்ளார்.
இதற்காக 1.25 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாகவும், மீண்டும் வங்கியில் கடன் கேட்டு உள்ளார்.
ஆனால் வங்கி அதிகாரிகள் வெங்கடேசனுக்கு கடன் தர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து இன்று காலை வெங்கடேசன் வங்கி முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து வெங்கடேசன் கூறுகையில் திறமையானவர்களுக்கு வங்கியில் கடன் கொடுக்க மறுக்கின்றனர்.
நகை சொத்து ஆவணம் கொடுத்தால் மட்டுமே கடன் பெறுவதாக கூறுகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வங்கி சார்பில் கூறுகையில் வெங்கடேசன் வாங்கிய கடனை கடந்த 7 தவணைகளாக கட்டாததால் அவருக்கு கடன் தர மறுப்பு தெரிவித்ததாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெங்கடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






