search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tornado winds"

    • தனுஷ்கோடி -அரிச்சல்முனை சாலையை முழுமையாக மணல் மூடியது.
    • வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிச னம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சுற்றுலா தலமான தனுஷ் கோடி, அப்துல் கலாம் நினை விடம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க் கின்றனர்.

    குறிப்பாக நாட்டின் தென் எல்லையாக உள்ள தனுஷ்கோடியின் கடல் அழகை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் அங்கு சென்று வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடியில் வழக் கத்தை விட கடல் கொந் தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் அலைகள் பனைமர உயரத் துக்கு எழும்பின.

    சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலைகள் முழுவதும் மணல்கள் மூடி யது. அடிக்கடி புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மணல் குவிந்ததால் வாகனங்கள் அதில் சிக்கின. இதனால் தனுஷ்கோடிக்கு செல்லும் வாகனங்கள் ரவுண்டானா வரை செல்ல முடியாமல் அரிச்சல் முனையில் நிறுத்தப்படு கிறது. அங்கு இருந்து சுற்று லாப் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தனுஷ் கோடியின் நினைவுச் சின்னங்களை பார்த்து வரு கின்றனர்.

    தனுஷ்கோடியில் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக அடிக்கடி சாலை களை மணல்கள் மூடுவது வழக்கம். நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப் பார்கள். ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு மேலாக சாலையில் குவிந் துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந் துள்ளது.

    ×