என் மலர்
நீங்கள் தேடியது "Tobacco awareness"
- துண்டு பிரசாரம் வினியோகம்
- தியானத்தை கடைபிடிக்க வேண்டும்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடை மூன்றில் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
புகையிலை பழக்கத்தை கைவிட தியானத்தின் மூலம் நம்முடைய மனோபலத்தை அதிகரித்து நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்களிலிருந்து நிரந்தரமாக ஈடுபட்டு அமைதியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை வாழ தியானத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
ரெயில் பயணிகள் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை கொடுத்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






