என் மலர்

    நீங்கள் தேடியது "TN Plus One result"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் கணிதத்தில் 95.24 சதவீதமும், உயிரியல் பாடத்தில் 96.96 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018
    சென்னை:

    பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    இதில் அறிவியல் பாடப்பிரிவுகளில் 92 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.2 சதவீத பேரும், கலை பிரிவுகளில் 80 சதவீதம் பேரும், தொழிற் பாடப் பிரிவுகளில் 82.3 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    உயிரியல் பாடத்தில்தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இதில் 96.96 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த பாடத்தை 3 லட்சத்து 4 ஆயிரத்து 281 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 27 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    அதற்கு அடுத்தப்படியாக கணிதம் பாடத்தில் 95.24 சதவீதம் தேர்ச்சி இருந்தது. 4 லட்சத்து 25 ஆயிரத்து 920 மாணவ-மாணவிகள் இந்த பாடத்தில் தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 667 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை 3,14,964 பேர் எழுதினர். இதில் 3,00,189 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.31 ஆகும்.

    இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் 93 ஆகும். இந்த பாடத்தில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வேதியல் பாடத்தில் 92.74 சதவீதம் தேர்ச்சியாகும். இந்த பாடத்தில் 4,84,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    விலங்கியல் பாடத்தில் 91.86 சதவீதமும், தாவரவியலில் 89.32 சதவீதமும் தேர்ச்சி இருந்தது. வணிகவியலில் 93.7 சதவீத மாணவ-மாணவிகளும் கணக்கு பதிவியலில் 93.8 சதவீதமும் தேர்வாகி இருந்தனர்.

    ‘பிளஸ்-1’ பொதுத் தேர்வின் மொத்த மதிப்பெண் 600. இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் 36,380 பேர் பெற்றுள்ளனர். இதில் 25,412 பேர் மாணவிகள். மீதியுள்ள 10,968 பேர் மாணவர்கள்.

    451-500 மதிப்பெண் வரை 64,817 பேரும், 426-450 மார்க் வரை 48,532 பேரும், 401-425 மதிப்பெண் வரை 61,351 பேரும் பெற்றுள்ளனர்.

    351முதல் 400 மார்க் வரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 581 மாணவ-மாணவிகளும், 301 முதல் 350 மதிப்பெண் வரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 765 பேரும் பெற்றுள்ளனர்.  #TNHSCResult #PlusOneResult2018

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சிறைச்சாலையில் தேர்வு எழுதிய கைதிகளில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018
    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளிகளே முதலிடத்தில் உள்ளன. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.6 சதவீதம் ஆகும். பெண்கள் பள்ளிகள் 94.9 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.4 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 91.6 சதவீதம், அரசுப் பள்ளிகள் 83.9 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 80.9 சதவீதம் என்ற அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2729. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2450.

    வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். இவர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல் பாடவாரியான தேர்ச்சி விகிதம், மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், மொத்த மதிப்பெண் அடிப்படையிலான பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை http://dge.tn.nic.in/HRSECFIRSTYEARMARCH2018ANALYSIS.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.   #TNHSCResult #PlusOneResult2018

    ×