search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvalluvar Day Festival"

    • வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பரிசு வழங்கினார்
    • ஏரளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழியக்கம் சார்பில் தமிழர் திருநாள், திருவள்ளுவர் தின விழா வேலூரில் நடைபெற் றது. விழாவிற்கு தமிழியக்க நிறுவனரும்,வி.ஐ.டி. வேந்தரு மான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    விழாவை டார்லிங் குழுமத்தலைவர் வெங்கடசுப்பு தொடங்கி வைத்தார். தமிழி யக்க பொது ச்செயலாளர் அப்துல்காதர், மாநில செய லாளர் சுகுமார், வட தமிழ் நாடு ஒருங்கிணை ப்பாளர் வணங்காமுடி, பொருளாளர் பதுமனார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

    அதை த்தொடர்ந்து அப் துல்காதர் தலைமையில் 'சுழலும் சொல்லரங்கம்' நடை பெற்றது. விழாவில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் பரிசு வழங்கி பேசினார்.

    வேலூர் மேயர் சுஜாதா 'தாங்கி பிடிப்போம் தங்க தமிழ்குடை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

    விழாவில் வக்கீல் பாலச்சந் தர், திருநாவுக்கரசு, அணைக் கட்டு சாரதி, தொழிலதிபர். வாலாஜா குலோப் ஷெரீப், தமிழியக்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள். கவிஞர் கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழியக்க மாவட்ட செயலாளர்

    ஜெயகர், மாநகர செயலாளர் ராஜசேகர், மாவட்ட இணைச் செயலாளர் அன்பு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

    ×