search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirumurthimalai"

    • உடுமலை அருகே மேற்கு த்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்திமலை.
    • நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றிலும் போதியவருவாய் கிடைப்பதில்லை.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு த்தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் அமை ந்துள்ளது திருமூர்த்திமலை. அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, படகு சவாரி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் என ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு மையமாக இப்பகுதி உள்ளது.திருமூ ர்த்திமலையில் சுற்றுலாவை அடிப்படையாகக்கொண்டு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்க ளுக்கு சுற்றுலா பயணி களின் வாயிலாக கிடைக்கும் வருவாயே வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில் திருமூர்த்திமலையில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது, மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுற்றுலா பயணி யருக்காக மலைவாழ் கிராம பெண்கள் உள்ளடக்கிய மகளிர் சுய உதவிக்கு ழுவினர்இயக்கும் படகுகள், கோடை விடுமு றையிலும் காட்சி ப்பொருளாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதே போல் நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றிலும் போதியவருவாய் கிடைப்பதில்லை. இப்பி ரச்சினைகளுக்கு தீர்வாக கோடை விடுமுறை கால த்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில்,திருமூர்த்தி மலையில் கோடை விழா நடத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி க்கை விடுக்கப்பட்டு வருகி றது.கோடைவிழா நடத்தப்படும்போது மாநிலம் முழுவதும் எளி தாக திருமூர்த்திமலையின் சுற்றுலா அம்சங்கள் குறித்த தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும். பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைப்பதால் உள்ளூர் மக்களும்பயன்பெ றுவார்கள்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது. பள்ளி வேலை நாட்களில் நடத்த ப்படும் இவ்விழாவால் சுற்றுலா மேம்பாடு அடைவதில்லை.மாறாக பெயரளவிற்கு அரசுத்துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு 2 நாட்களில் அகற்ற ப்படுகின்றன. இதை மாற்றி கோடை விடுமுறை கால த்தில் முற்றிலும் சுற்றுலா த்துறை சார்பில் மலர் கண்காட்சி உட்பட மக்களை கவரும் அரங்குகளை அமைத்து விழா நடத்தி னால், திருமூர்த்திமலையின் சிறப்புகள்மாநிலம் முழுவதும்எளிதாக சென்று சேரும்.சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அதிகரிக்கும்.மேம்பாட்டுப்பணிகளையும் மேற்கொள்ள முடியும். எனவே இந்தாண்டாவது கோடை விழா நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உடுமலை பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. 

    • எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
    • மக்கள் அலறியடித்தபடி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அணை அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. கடந்த 1972ல் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து இப்பகுதிக்கு அம்மக்கள் இடம் பெயர்ந்தனர்.கடந்த 1984ல் அரசு சார்பில் 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன.

    இந்த குடியிருப்பில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பில், போதியளவு தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் இரவு குடியிருப்பில் காட்டுப்பன்றிகள் புகுந்துள்ளது. அங்கு, தென்னை ஓலை தடுப்புகளால் அமைந்த வீடுகளில், காட்டுப்பன்றிகள் புகுந்து அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தியுள்ளன.அரிசி மற்றும் இதர உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர பாத்திரங்களை சிறிது தூரம் இழுத்து சென்று வீசியுள்ளன.

    இதை பார்த்த மக்கள் அலறியடித்தபடி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும் பல மணி நேரம் குடியிருப்பை விட்டு காட்டுப்பன்றிகள் வெளியேறவில்லை. கன்னியம்மாள், சுப்பிரமணி, பழனியம்மாள், கண்ணப்பன் உள்ளிட்டோர் வீடுகளில், அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். பிரச்னைக்கு நிரந்தர தீர்வாககுடியிருப்புகள் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×