என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Those who threw bombs at the house were arrested"

    • போலீசார் விசாரணை
    • காய்கறி வியாபாரியை மிரட்டி பணம் பறித்தனர்

    வேலூர்:

    வேலூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 29). இவர் வீட்டையொட்டி நகை அடகு கடை வைத்துள்ளார். இந்த கடையில் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

    வீட்டில் குண்டு வீச்சு

    கடந்த மாதம் முகேஷ்குமார் நகை அடகு கடையை பூட்டி விட்டு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு மாடியின் முன்பகுதியில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஜன்னல் கண்ணாடி லேசாக சேதமடைந்தது. இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நகை அடகு வியாபாரி வீட்டில் குண்டு வீசியது சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி திலீப் என்கிற பிரகாஷ் (24), மதன் (25) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் என தெரிய வந்தது.

    இதில் மதன் மற்றும் திலீப் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த ரவுடி கும்பல் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. அலமேலுமங்கபுரம் சமாதான நகரை சேர்ந்த குமார் (30) டபுள் ரோட்டில் ஆட்டோவில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரிடம் மதன், திலீப் ஆகியோர் காய்கறி வாங்குவது போல நடித்து திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ.2000 பறித்து சென்றனர்.

    வியாபாரி குமார் கூச்சலிட்டார்.அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பான வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×