search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvennainallur farmer death"

    திருவெண்ணைநல்லூர் அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பனைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 55). விவசாயி. இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தட்சிணாமூர்த்தி மனவேதனை அடைந்தார். கவலையை மறக்க மதுகுடித்து வந்தார். நேற்று அவர் காந்திக்குப்பம் என்ற இடத்தில் விற்கப்பட்ட வெளிமாநில மதுவை வாங்கி குடித்தார். அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் சாலையோரம் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணைநல்லூர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×