search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvadudurai Adheenam"

    • சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்துதான் செங்கோல் பெறப்பட்டது.
    • புதிய பாராளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது தமிழர்கள் பெருமைப்படும் விஷயமாகும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி ரோட்டில் அமைந்துள்ள செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (27-ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரியர் சுவாமிகள் கலந்து கொண்டார். பின்னர் அவர் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்துதான் செங்கோல் பெறப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடியின் பெரும் முயற்சிக்கு பின் மீண்டும் அந்த செங்கோலுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

    புதிய பாராளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது தமிழர்கள் பெருமைப்படும் விஷயமாகும். இதன் காரணமாக செங்கோல் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவது நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×