search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruttani Railway station"

    • மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஜேசிபி வாகனம் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே குதித்தார்.

    திருத்தணி:

    திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி, ரேணிகுண்டா , அரக்கோணம், திருவள்ளூர், சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு தினமும் மின்சார ரெயில் மற்றும் விரைவு ரெயில்கள் மூலம் 5,000 த்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.


    இந்நிலையில் திருத்தணி ரெயில் நிலையத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஜேசிபி வாகனம் மூலம் இடிக்க முயன்ற போது திடீரென மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஜேசிபி வாகனம் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே குதித்தார்.

    இச்சம்பவம் திருத்தணி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×