search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirusti pariharam"

    கருடக்கிழங்கை வீட்டு வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் எதுவும் வராது. திருஷ்டி தோஷம் இருந்தால் நீங்கிவிடும். கருடக் கிழங்குக்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது.
    கருடக்கிழங்கு என்பது ஒரு மூலிகையாகும். இது பார்ப்பதற்கு கருடன் சிறகை விரித்துப் பறப்பைதைப் போல் இருக்கும். இந்தக் கிழங்கை வீட்டு வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் எதுவும் வராது. திருஷ்டி தோஷம் இருந்தால் நீங்கிவிடும். கருடக் கிழங்குக்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது.

    இந்த கருடக்கிழங்குகள் எல்லா இடத்திலும் விளையாது. கருடன் எந்த இடத்தில் வட்டமிடுகிறாரோ அந்த இடத்தில் தான் இந்த கிழங்கு வளரும். அதற்காக கருடன் வட்டமிடும் இடங்களில் எல்லாம் இந்த கிழங்கு வளரும் என்று அர்த்தமில்லை. அதற்கும் சில தாத்பரியங்கள் உள்ளது.

    அந்த வகையில் தமிழகத்தில் சதுரகிரி மலையில் மட்டுமே கருடக்கிழங்கு விளைவதாக சொல்கிறார்கள். அந்த மலையில் கருடன் அடிக்கடி வட்டமிடும் பகுதியில் சென்று இந்த கிழங்கை தோண்டி எடுத்து வருகிறார்கள். பிறகு அவை சுத்தம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    நாட்டு மருந்து கடைகளில் கருடக்கிழங்கு விற்பனை செய்யப்படும். ஆனால் அதிலும் போலியான கருட கிழங்குகள் வந்துவிட்டன. எனவே பார்த்து வாங்க வேண்டும். திருமுல்லை வாயலில் பச்சையம்மன் கோவில் அருகே ஒரு கடையில் சதுரகிரியில் இருந்து வரும் கருடக்கிழங்கு விற்பனை செய்யப்படுகிறது. கருடக்கிழங்கு கையில் வந்தாலே புது சக்தி வந்துவிட்டதாக அர்த்தம்.

    குடும்பத்தில் நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் ஆற்றல் கருடக்கிழங்குக்கு உண்டு. கருடன் ஆசீர்வாதத்தால் வரும் இந்த கிழங்கை கிடைத்தால் தவற விடாதீர்கள். வீட்டில் உரிய பூஜைகள் நடத்தி அதற்கு தகுந்த மரியாதை செய்யுங்கள். கருட கிழங்கு நல்லதை உங்களுக்கு கொடுக்கும்.

    கருடக்கொடி மிகவும் விசித்திரமானது. கருடக் கொடியைக் கையில் வைத்திருப்பவர்கள் நோய், நொடி, செய்வினை, பில்லி, சூனியங்கள் முதலியவைகளுக்கு உட்படமாட்டார்கள். கருடக்கொடி பெரிய கனமான இரும்புகளையும், திறக்காத பூட்டுக்களையும் பட்டென விடச் செய்யும். வெளிநாடுகளில் கருடக் கொடியை மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த அபூர்வ சக்தியாகக் கருதுகிறார்கள்.
    ×