search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumeninathar"

    • திருமேனிநாதர் சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    10-ம் நாள் தபசு நிகழ்ச்சி யானது நேற்று திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரி சையாக நடைபெற்றது. துணைமாலை அம்மன் கோபமுற்று தபசு மண்ட பத்தில் தவம் மேற்கொண்ட தாகவும், அப்போது திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை விளக்கும் வகையில் குண்டாற்றில் ஆடித்தபசு திருவிழா நடந்தது. அப்போது திருமேனி நாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் சுவாமியை 3 முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப் பட்டது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு கோவிலைச் சென்றடைந்தனர். திருவிழா வைக் காண திருச்சுழி, அருப்புக் கோட்டை, நரிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.

    திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×