என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukan Kumbabhishekam"

    • தெற்குத் தெரு வெள்ளாளர் பெருமக்கள் சங்க மண்டகப்படிக்கு எழுந்தருளும் மண்டபம் புதுப்பிக்கப்பட்டு திருக்கண் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கந்தப்ப ஆதீனம் சர்வசாதகம் திருநாவுக்கரசு குருக்கள் வேதங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து கலசங்களுக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் நகர்வலம் வரும்பொழுது தெற்குத் தெரு வெள்ளாளர் பெருமக்கள் சங்க மண்டகப்படிக்கு எழுந்தருளும் மண்டபம் புதுப்பிக்கப்பட்டு திருக்கண் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கந்தப்ப ஆதீனம் சர்வசாதகம் திருநாவுக்கரசு குருக்கள் வேதங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து கலசங்களுக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பழைய வத்தலக்குண்டு தெற்குத் தெரு வெள்ளாளர் பெருமக்கள் சங்க தலைவர் நிர்வாகிகள் செய்திருந்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தெற்கு தெரு பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் நாட்டாமைகள் சதாசிவம்பிள்ளை, கதிரேசன்பிள்ளை, மணியக்காரர் பழனிவேல்பிள்ளை, கவுரவத் தலைவர் மகாராஜன்பிள்ளை, தலைவர் நமச்சிவாயம்பிள்ளை, துணைத்தலைவர் அங்குபிள்ளை, செயலாளர் சேகர்பிள்ளை,துணைச் செயலாளர் உதயசூரியன்பிள்ளை, பொருளாளர் ராஜேந்திரன்பிள்ளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பழைய வத்தலகுண்டு ஊராட்சி மன்ற தலைவர் யசோதைமுருகேசன்பிள்ளை, வத்தலக்குண்டு வெள்ளாளர் பெருமக்கள் சங்க தலைவர் ஜெயமாணிக்கம்பிள்ளை மற்றும் தெற்குத் தெரு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்தலக்குண்டு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் செய்திருந்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கார்த்திக்பிள்ளை நன்றி கூறினார்.

    ×