search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Therppavani"

    • மாலை நேரங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் சிறப்பு திருப்பலி
    • பொதுமக்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் கடலை மிளகை ஆரோக்கிய அன்னை மீது தூவி வழிபாடு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தூய ஆரோக்கிய அன்னையின் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணியில் திருவிழா தொடங்கப்பட்டதுடன் அதனை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கோத்தகிரியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா நடைபெறும்.

    கடந்த 1 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வாரம் முழுவதும் மாலை நேரங்களில் அன்பியம் சார்பாக தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை மிக விமரிசையாக பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. காலை 6,7,8 மணி சிறப்பு திருப்பதிகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 10 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிருஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் முன்னிலையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயகுமார் தலைமையில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன் னையின் ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. அன்னையின் ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய பிரதான வீதிகளான பஸ் நிலையம், கடைவீதி, காம்பாய் கடை,காம ராஜர் சதுக்கம்,ராம்சந்த் உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தேர்பவனியின் போது பொதுமக்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதற்கும், வேண்டுதல்கள் நிறைவேறவும் கடலை மிளகை ஆரோக்கிய அன்னையின் மீது தூவி வழிபட்டனர். பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த திருவிழாவிற்கு நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரபாகர்,குன்னூர் டி.எஸ்.பி. குமார், கோத்த கிரி இன்ஸ்பெக்டர் வேல்மு ருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாதவ் கிருஷ்ணன், ரமேஷ்,பப்பிலா ஜாஸ்மின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×