என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "There is great interest among the students"

    • 30 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
    • ரோபோக்கள் கட்டளைகளை நிறைவேற்றியதை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    நவீன தொழில் நுட்பத்தில் உலகம் மூழ்கி வரும் நிலையில் எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் ரோபோவின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    பெருநகரங்களில் உள்ள உணவகங்கள் தங்கும் விடுதிகளில் மனிதர்களுக்கு பதில் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதை காணமுடிகிறது.

    எதிர்காலத்தில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில் சிறுவயது முதலே ரோபோ வடிவமைப்பு குறித்து மாணவ மாணவிகள் இடையே மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது.

    வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் 2 நாள் எந்திரனியல் (ரோபோடிக்ஸ்) பயிற்சிப்பட்டறை நடந்தது.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் 30 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பிரத்தியேக ரோபாட் பயிற்சியாளர்கள் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    ரோபோவின் பாகங்களை தொகுத்து வடிவமைப்பது எப்படி? அவற்றிற்கு கட்டளைகள் வழங்குவது? எப்படி?, சின்ன சின்ன சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    பள்ளி மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையை பயனுள்ளதாக களிக்கும் வகையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ரோபோவில் உள்ள உதிரி பாகங்கள் என்னென்ன அவற்றின் பயன்பாடுகள் என்ன அவற்றை எப்படி தொகுத்து வடிவமைப்பது மற்றும் அவற்றுக்கு கட்டளைகள் எப்படி வழங்குவது உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றனர்.

    இந்த பயிற்சியில் இ.வி-3 ரோபோ வட்டமாக சுற்றுதல் சதுரமாக சுற்றுதல் மற்றும் தடைகளை கண்டறியும் சென்சார் மற்றும் நிறங்களை கண்டறியும் சென்சார்கள் மூலம் ரோபோவிற்கு கட்டளைகளை வழங்கி பள்ளி மாணவர்கள் இயக்கி அசத்தினர்.

    தங்களது கட்டளைகளுக்கு ஏற்ப ரோபோ செயல்படுவதைக் கண்டு மாணவ-மணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிறுவர்கள் விளையாட்டாக தொழில் நுட்பத்தையும், கட்டளைகளை (கோடிங்) எழுதுவதையும் மட்டுமல்லாமல் அறிவியலையும், கணிதத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் வழிவகுக்கும் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

    ×