என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The worker fell down and died"

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை தாலுகா மல்லிகா கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (வயது 40). இவரது மனைவி சித்ரா.

    இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ள னர். இவர் கடந்த சனிக்கிழமை தொழில் நிமித்தமாக உறவினரான சரவணன் என்பவரது மகன் கார்த்திக்ராஜாவுடன் (26) காஞ்சீபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாலையிட்டான்குப்பம் கிராமம் அருகே காஞ்சீபுரம் சாலையில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து வீரப்பன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து வீரப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×