என் மலர்
நீங்கள் தேடியது "The thief who burned the roosters"
- குடிசை வீட்டிற்கும் பரவியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் புதிய கோர்ட் பகுதியை சேர்ந்தவர் சீனு (வயது42), கணவனை இழந்தவர். தற்போது குடிசை வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
இதனை நோட்டமிட்ட திருடன், சீனு வீட்டிற்குள் நுழைந்தான். அப்போது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சேவல்கள், திருடனை பார்த்து சத்தம் போட்டன. இதனால் தான் எங்கே மாட்டிக்கொள்வோம் ? என ஆத்திரமடைந்த திருடன், சேவல்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுகளுக்கு தீ வைத்தான். கண் இமைக்கும் நேரத்தில் மளமளவென பற்றிக்கொண்ட தீ சேவல்களை கருகி கொன்றதோடு, குடிசை வீட்டிற்கும் பரவியது.
வேலைக்கு சென்ற சீனு வீட்டிற்கு வந்துபார்த்த போது, சேவல்கள் மற்றும் வீடு உள்ளிட்டவை தீயில் கருகிப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் திருடன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சேவல்களுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






